Showing posts with label சங்க இலக்கியங்களில் வடமொழி சொற்கள். Show all posts
Showing posts with label சங்க இலக்கியங்களில் வடமொழி சொற்கள். Show all posts

Monday, 20 August 2018

சங்க இலக்கியங்களில் வடமொழி (சமசுகிருதம்) சொற்கள் இருந்ததா?

இது முகநூளில் நாண்பர் ஒருவருடன் செய்த விவாதத்தில் எனது பதில்கள்:


சங்க காலம் என்பது கி.மு.நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை. அந்த காலகட்டத்தில் எழுதப்பட்டதே சங்க இலக்கியம்.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை சங்கம் மருவிய காலம், அதாவது தமிழர் அல்லாதோரின் ஆட்சிகாலம். அப்பொழுதுகூட தமிழ் எந்த சீர்கேடும் இல்லாமல் இருந்தது.

கி.பி.ஏழு முதல் ஒன்பாதம் நூற்றாண்டு வரை பத்தி இலக்கிய காலம். அந்த காலகட்டத்திலேதான் சமசுகிருதம் தமிழில் உள்வாங்கப்பட்டது. அதுதான் தமிழ் தூய்மை நிலையிலிருந்து சீர்கெட ஆரம்பித்தது. பக்தி இலக்கியம் என்ற பேரில் தேவையின்றி சமசுகிருத சொற்கள் பயன்படுத்தப்பட்டது.

தமிழர்களின் பக்தியுணர்வை பெளத்த சமண சமயங்களை தமிழகத்திலிருந்து அழிக்க பயன்படுத்திய காலமே பக்தி இலக்கியம் வளர்ந்த காலம். தமிழின் எழுத்து நடையும் இலக்கிய நடையும் சீர் கெட்டதும் இந்த காலத்தில் தான்.

சங்கத்தமிழில் சமசுகிருதம் இல்லை, அதேபோல் பக்தி இலக்கியத்தால் தமிழுக்கு எந்த நன்மையையும் கிடையாது தீமை என்பதே.